Wednesday, August 24, 2011

அறிமுகம்

புதிய படைப்பாளர்களை அடையாளப் படுத்தவும் ,படைப்புகளின் மீதான ஆக்க பூர்வமான பார்வைகளையும் பகிரவும் இத்தளம் துவங்கப் பெற்றிருக்கிறது. படைப்புகள் குறித்த பரிந்துரைகள்,மொழிபெயர்ப்புகள் குறித்த கவனப் படுத்துதல்கள் வரவேற்கப் படுகின்றன.படைப்புகள் கதை,கவிதை, கட்டுரை, ஓவியம், நாவல் அறிமுகம் என எல்லா வகைமைகளிலும் அமையும்.

ஆர்வலர்களின் தொடர்ந்த பங்களிப்பே ஊக்கமும் உற்சாகமும் வழங்கக் கூடும்

நன்றிகள் ! 

8 comments:

Anonymous said...

நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்...

rajasundararajan said...

முதல் எட்டு உடனே எடுத்து வைத்துவிட்டதைக் காண மகிழ்ச்சி. இப்படி ஒரு தளம் தொடங்கப்பெற்றிருக்கிறது என்று எல்லாப் பதிவர்களுக்கும் அறிவிக்க ஏற்பாடு செய்யுங்கள். பிறகு, இதில் பதிவேற்றப்பட எல்லாரும் தங்கள் படைப்புகளை அனுப்பலாம் என்று தெரியப் படுத்துங்கள். ('உயிரோசை' அப்படித்தான் இயங்குகிறது இல்லையா? அதனால்...) முக்கியமாக, தங்களுக்குப் பிடித்த மற்றவர் படைப்புகளைத் தேர்ந்தெடுத்துப் பரிந்துரைக்கச் செய்யுங்கள். ஆக்கபூர்வமான விமர்சனத்துக்கு முதலிடம் கொடுங்கள். இன்னும் இளைஞர்களைக் கலந்து உருப்படுத்த வழி தேடுங்கள். நம் பிள்ளைகளை நாமே பாராட்டாவிட்டால் ஊரார் மெச்சப்போவதில்லை.

நேசமித்ரன் said...

மிக்க நன்றி ரெவெரி

ராசு அண்ணன் மிக்க நன்றிண்ணே அப்படியே செய்துடலாம்

வடகரை வேலன் said...

வாழ்த்துக்கள் நேசனுக்கும், உடனிருந்து உதவுபவர்களுக்கும்.

நல்ல முயற்சி. வெற்றியடையட்டும்.


பின்னூட்டத்திற்குத் தனிப் பெட்டி திறப்பதை மாற்றி அமையுங்கள் நேசா.

இப்னு ஹம்துன் said...

நல்ல செயல். மணம் பரப்பும் மனம் வாய்த்த உங்களுக்கு என் வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

வேலன் அண்ணாச்சி நன்றிகள், இப்போதைக்கு நான் மட்டுமே :)

பின்னூட்டபெட்டி விரைவில் மாற்றி விடலாம்

இப்னு ஹம்துன்

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்

Unknown said...

வாழ்த்துகள்!

Unknown said...

நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்.