Thursday, April 5, 2012

சி.மணி - நினைவு நாளை முன்னிட்டு


சாதி வழியாக உருவான உறவுகளை மறுத்த சி.மணி
செல்மா பிரியதர்ஸன் 

நன்றி : கீற்று
எழுத்து என்பதை ‘பேச்சின் நோய்’ என்ற ரூசோவின் கண்டுபிடிப்பை இடைமறித்து இல்லாததும் முக்கியமானதுமான ஒன்றை வழங்குவதன் மூலமாக எழுத்தானது பேச்சை முழுமையடையச் செய்கிறது அல்லது எது இல்லாமல் பேச்சு தத்தளித்து நிற்குமோ அதை எழுத்து நிறைவாக்குகிறது என்கிறார் தெரிதா. பேச்சிலிருந்த தனது குரலை கவிதைக்குள் ஒளித்து வைத்ததால் தான் இல்லாத இடத்திலும், இல்லாமலே போனபின்னும்கூட கவிஞரின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. கவிஞர்கள் தாங்கள் வாழும் காலங்களில் எங்ஙனம் நடந்து கொள்கிறார்கள் என்ப¨¾ யோசித்தால் விந்தைதான். குடும்பத்திற்குள்தான் பிறக்கிறார்கள். அமைப்பிற்குள்தான் வாழ்கிறார்கள். நம்பிக்கையற்றவர்களாக, சதா வெளியேறிக்கொண்டும், எங்கிருந்தாவது வந்து கொண்டும், ஒரே இடத்தில் தங்கிவிட முடியாதவர்களாக, பிடிப்பற்றவர்களாக சமயத்தில் உழைக்காமலும், அறிந்தே, விரும்பியே சுய நசிவிற்கு ஏன் ஆளாகிறார்கள்? குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் அந்நியப்பட்டு, வாழ்வதற்கும் பொருளீட்டுவதற்கும் எந்த வகையிலும் உத்திரவாதமளிக்காத ஒரு எழுத்து முறையை சமூக அமைப்பிற்குள் ஏன் விடாப்பிடியாகக் கைக்கொள்கிறார்கள்? கவிஞர்கள் ஏன் நோய்மை அடைகிறார்கள்? ஒருவேளை சமூகம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா? பொதுவாக நம்பப்பட்டு வரும் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு எதிரான நோய்மையாகவே எழுத்து அமைந்து விடுகிறதா?

C Mani memoriesபிளாட்டோகூட தன்னுடைய லட்சியக் குடியரசிலிருந்து கவிஞர்களை அரச விலக்கம் செய்கிறார். கவிதைகள் கண்டிக்கப்படுவதும் கவிஞர்கள் சிறுமைப்படுத்தப்படுவதும் சமூகத்தின் பொதுக் கருத்தாக உருவாகி வந்திருக்கிறது. குடிமக்களைத் தப்பு வழிக்குத் தூண்டி, மட்டுமீறிய ஆசைகளை வரவழைக்கும் ஏமாற்றுப் போக்குடைய விளையாட்டுத்தனமான வகையினமாகவே கவிதைகளையும் கவிஞர்களையும் பிளேட்டோ குறிப்பிடுகிறார். அமைப்பை உருவாக்குபவர்களுக்கு, அதை அதிகாரத்தினால் வழிநடத்திச் செல்பவர்களுக்கு கவிஞர்கள் ஒருவகையான அச்சுறுத்தலாக, தொந்தரவாகவே ஆரம்பம் தொட்டே இருந்து வந்திருக்கிறார்கள். தனது சுய அழிவை அதிகாரத்திற்கு எதிராக கடைபிடிக்கிறார்கள். சமீபத்தில் தங்களது மரணத்தை முடித்துக்கொண்ட சி. மணியும் அப்பாஸூம்கூட சுய அழிவிற்கு தங்களை உட்படுத்திக் கொண்டவர்கள்தான். சி. மணியின் கவிதைகளுக்கு வெளியே நமது சமூகம் தெâந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான செய்தி ஒன்று உண்டென்றால் அது சி. மணி தனது சொந்த சாதியோடு தனக்கிÕந்த அத்தனை பிடிமானங்களையும் அறுத்துக்கொண்டதுதான். சாதி வழியாக உருவான உறவுகளை மறுத்தார். அவ்வகையில் உறவினர்கள் இல்லாமல் இருந்தார். சாதி வழியான ஒன்று கூடல்கள், குடும்ப விழாக்கள் ஆகியவற்றையும்கூட தவிர்த்தார். இறந்தபோது அவரது மரண ஊர்வலம் இருபதிற்கும் குறைவான நபர்களோடே நடந்தது.

இந்தக் கவிஞன் சமூகத்திற்கு முன்னால் ஏன் தன்னை அனாதையாக்கிக் கொள்ளவேண்டும்? தனக்கு உடன்பாடற்ற, தவ¦Èன்று உணர்ந்த சமூகத்தின் சாதிய கட்டுமானங்களுக்கு எதிரான கலகமாக, தண்டனையாகத் தன்னை அனாதையாக்கிக் கொண்டு மரணமடைகிறார். எழுத்து, கணையாழி, ஞானரதம், நடை, கசடதபற ஆகிய இதழ்களில் எழுதி, ‘வரும்போகும்’(1974), ‘ஒளிச்சேர்க்கை’(1976) ஆகிய கவிதைத் தொகுப்புகளாக வெளிவந்த கவிதைகளையும் அதற்குப்பின் எழுதிய கவிதைகளையும், 1996ல் கிரியா பதிப்பகத்திலிருந்து ‘இதுவரை’ என்ற முழுத்தொகுப்பாக நண்பர்கள் கொண்டு வந்தபோது சிறிதும் உடன்பாடற்று இருந்தார். முடிந்துபோன தனது கவிதைகள் அனைத்தையும் எரித்துவிட விரும்பினார். குரல்வளை சுருங்கி உணவுப்பாதையும் நுரையீரலும் பழுதடைந்த பின்னரும் நீரூற்றி தொய்வாக்காத அடர்ந்த மதுவினை பருகியும் விடாப்பிடியாக புகைத்துக் கொண்டுமிருந்தார். சிறு உணவை மட்டுமே அவரது உள்ளுறுப்புகள் அனுமதித்த நிலையிலும் அடையாளம் பதிப்பகத்திற்காக ‘ப்ராய்ட்’, ‘புத்தர்’, ‘பெளத்தம்’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்தார்.

அவர் உடல் அழிந்து கொண்டிருந்ததை அவர் பார்த்தார். அனாதித்தனமும் சுய அழிவும்தான் அவரை இங்ஙனம் எழுத வைத்தது. ‘இனிமேல், செய்யப் போவதில் பழக்கமற்றது . . . சாவதும், பழக்கமானதோ என்னவோ? . . . அதுவும் நாள்தோறும்’. பெயரில் திருப்தியற்று சி. மணி, வே. மாலி, எஸ். பழனிச்சாமி, செல்வம், ஓலூலூ, தாண்டவ நாயகம், ப. சாமி என்ற பெயர்களில் மாறி மாறி எழுதிவந்தார். க்ரியாவோடு இணைந்து தமிழகராதி தயாரிக்கும் பணியில் பல ஆண்டுகள் தொடர்ந்து உழைத்தார். இலக்கியம் தவிர்த்து அறிவியல், தத்துவம், உளவியல் ஆகிய துறைகளையும் அறியும் வேட்கைக் கொண்டலைந்தார். எதிலும் திருப்தியற்று, எதிலும் தங்கிவிடாது, அறிந்ததற்கு அப்பாலுள்ள பிரக்ஞை தளங்களை நோக்கி தகித்த வண்ணமிருந்தார். தடித்து ஒலித்த நவீனக்கவிதையின் ஒற்றைக் குரலை உடைத்து பல குரல்கள் பங்கேற்கும் உரையாடலாக மாற்றியமைத்தார். தனது காலத்தில் நிலைபெற்றிருந்த கவிதையல்லாத வேறொன்றையே எழுதினார். செய்திகளையும் அன்றாடங்களையும்கூட கவிதையாக்கிக் காட்டினார். அதனால் தான் வாழும் காலங்களில் மெளனப்படுத்தப்பட்டார்.

நவீனம், பின் - நவீனத்துவம் ஆகிய கருத்தாக்கங்கள் தமிழில் நிலைபெறும் காலங்களுக்கு முன்பே அவை பற்றிய மெல்லிய சலனங்களை கவிதைகளுக்குள் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். ‘சொல்ல விரும்பியதெல்லாம் சொல்லில் வருவதில்லை. எண்ணம், வெளியீடு, கேட்டல் இம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல. ஒன்றென்றால் மூன்றான காலம்போல் ஒன்று’ என்று இடையீடு செய்து பார்த்தார். குழுக்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. வாசகர்களை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கவில்லை. தனது எழுத்தை நிலைநிறுத்திக் கொள்ள எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. ஒன்றை எழுதவும், அதனை மறுக்கவும், பிறிதொன்றை எழுதவும், அதனையும் மறுக்கவுமாக, எழுதியதை, சிந்தித்ததை மறுத்துக்கொண்டே வந்த சி. மணியின் படைப்புகள் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டும். அவரது கவிதைகள் மீளாய்வு செய்யப்பட்டு தற்போது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் எந்த வகை மாதிரியான கவிதைகளுக்கான ஆரம்பமாய் அவரது கவிதைகள் இருந்தன என்பது கண்டு சொல்லப்பட வேண்டும்.

பழைய ஜமீன் குடும்பமொன்றோடு நெருங்கி வாழ்ந்து வந்த அப்பாஸ், நிலவுடமை சமூகத்தின் கலை மற்றும் கேளிக்கை மனோபாவத்தோடு கூடிய அழகியல் உணர்வின் தீவிர எழுச்சியுள்ளவர். ஆனால் ஆதிக்கக் கருத்தியலின் தடயங்களை அவரது கவிதைகளில் காண முடியாது. வாழ்வின் மீதான கொண்டாட்டமும் நவீன வாழ்வின் நெருக்கடியும் சந்தித்துக் கொள்கிற இடத்தில் உல்லாசமும், வலியும், களிப்பும், வேதனையுமாக அவரது கவிதைகளுக்குள் பல குரல்கள் முட்டி மோதி ஒருவித கூத்துத் தன்மையை எய்துகிறது. அவர் ஒரு மதுப்பிரியர், உல்லாசி, நிலவுடமை கலாச்சாரத்தின் கேளிக்கை மீதிருந்த நாட்டமாக கவிதைகள் எழுதியவர் என யாரேனும் அவரது ஒட்டுமொத்தக் கவிதை வாழ்வையும் மேம்போக்காக முடித்தும்கூட வைக்கலாம். அவரது பின்னணி பற்றி அறிந்திராத புதிய வாசகருக்கு அவரது கவிதைகள் வேறுவிதமான அனுபவங்களை உருவாக்கும். எல்லாம் மது மேசைக்கு முன்பிருந்து தொடங்குவதுபோல பாவனை செய்கிற அவரது கவிதை உலகம் சகலத்தோடும் முட்டி மோதி தத்துவநிலையோ, ஆன்மீக நிலையோ எய்திவிடாமல் கவித்துவ பித்து நிலையை உருவாக்குகிறது.

N.Muthusamyநீண்ட நவீன கவிதைகளை முயற்சித்துப் பார்த்தார். அதில் டேனியல், பசவராஜ், பொன்ராஜ், கேசவன், ருத்ரா என்ற பாத்திரங்களைத் தொடர்ந்து விவாதிக்க வைத்தார். வாசிப்பிற்கு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தும் இவரது கவிதைகள், உண்மையில் மது மேசைகளுக்கானவை மட்டுமல்ல. தன்னையும், தன்னோடு தொடர்புடைய அனைத்தையும் விமர்சித்துக் கொள்கிற தீவிரமான ஒரு மனோநிலைக்கு இட்டுச் செல்லும் தவிப்பாக அவரது கவிதைக் குரல் இருக்கிறது. அந்தத் தீவிரமான மனோநிலை அவரது கவிதைகளில் பெரும் போதையாக, சுய மறுப்பாக, நிற்குமிடத்திலிருந்து கடக்கும் அவஸ்தையாக, கேள்வியாக, சராசரி அலுப்புற்ற வாழ்விலிருந்து விடுபடலாகவுமே இருக்கிறது. கடந்து கடந்து போகத் துடித்து முட்டி முட்டி மோதி நிற்கும் அவலத்தின் துடிப்பாக பெரும்போக்கில் கொண்டாட்டத்தின் பேருவைகையாக அப்பாஸின் குரல் ஒலிக்கிறது. அவரது குரல் தத்துவமாகவில்லை, அரசியலாகவில்லை. விடுபட்ட இடத்தை எட்ட விரும்பும் கவித்துவ துயரமாக தனது இருப்பை முணுமுணுக்கும் கவிதைகளை அப்பாஸ் எழுதி வந்தார்.

இலக்கிய கூட்டங்களில் மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொள்வதும், பொதுக் கருத்தியல்கள் மேல் பூசல்களை உருவாக்குவதையும், வாடிக்கையாகக் கொண்டிருந்தார். தன் காலத்து ஆளுமைகளால் புரிந்து கொள்ள முடியாத கேள்விகளை அவர்களை நோக்கி ஏழுப்பினார். (நெல்லையில் கள்ளழகர் ஏற்பாடு செய்திருந்த அரங்கமொன்றில் சுந்தரராமசாமி வாசித்தக் கட்டுரை மீது அப்பாஸ் ஒரு கேள்வியை எழுப்பினார். அக்கேள்வி தனக்குப் புரியவில்லை என்று சுந்தரராமசாமி சொல்ல, மூன்றாவது முறையாகவும் அதே கேள்வியைக் கேட்க மூன்றாவது முறையும் அந்தக் கேள்வி தனக்குப் புரியவில்லை என பதிலளிக்க சுந்தரராமசாமி மறுத்துவிட்டார்.) இறுதியாக ‘முதலில் இறந்தவன்’ என தனது கவிதை நூலிற்கு தலைப்பை தேர்ந்தெடுத்தார். மஞ்சள் காமாலை நோய் முற்றிலும் குணமாகாத நிலையிலும் தொடர்ந்து மது அருந்தினார். இறுதி நாட்களில் நண்பர்களைத் தவிர்த்தார். உள் அவயங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 52- வது வயதில் மரணமடைந்தார். சி. மணியும், அப்பாஸூம் ஒருவகையில் சுய அழிவிற்கு தங்களைத் தாங்களே இட்டுச் சென்றனர். தாங்கள் நம்பிய வாழ்வை வாழ்ந்தார்கள். நம்பிய கவிதைகளை எழுதினார்கள். தீர்வற்ற அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்வை மரணம் ஒத்ததாய் இருவரும் எழுதினார்கள். அங்ஙனம் தங்களது மரணத்தை ஒரு நாள் தழுவிக் கொண்டனர்.

ஏப்ரல் 19, ஞாயிறு மாலை சென்னை லயோலா கல்லூரி அருகிலுள்ள அய்க்கப் அரங்கில் ‘தமிழ்க் கவிஞர்கள் கூட்டமைப்பு’ சார்பில் சி. மணி, அப்பாஸ் ஆகிய இருவருக்கும் நினைவரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓவியர் மணிவண்ணன் வரைந்த இருவரது உருவ ஓவியங்களும் அரங்கம் நிறைய வியாபித்திருந்தன. எழுத்தாளரும், இசைஞருமாகிய குமார் அம்பாயிரம் ‘டிஜிருடு’ என்ற ஆஸ்திரேலிய பழங்குடி இசையை இசைத்தார். தமிழ்க் கவிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கவிஞர் சுகிர்தராணி வந்திருந்தவர்களை வரவேற்றார். தமிழ்க்கவிஞர்கள் இணைந்து மெரீனா கடற்கரையில் ஈழப்போருக்கு எதிராக நடத்திய கவிதைப் போராட்டம் அதனைத் தொடர்ந்து டெல்லியில் இலங்கை தூதரகத்திற்கு முன் நடத்திய போராட்டங்களைக் குறிப்பிட்டு இவ்வமைப்பு இலக்கிய, சமூக, கலாச்சாரத் தளங்களில் தொடர்ந்து செயல்படும் என்ற நம்பிக்கையைப் பதிவு செய்தார்.

அரங்கம் இரண்டு அமர்வுகளாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அப்பாஸ் பற்றிய முதல் அமர்வை நெறியாளுகை செய்த யவனிகா ஸ்ரீராம், அப்பாஸின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். மனுஷ்ய புத்திரன் அப்பாஸின் உருவ படத்திற்கு மலர்தூவி உரையாற்றினார். கோணங்கி, பா. வெங்கடேசன், லதா ராமகிருஷ்ணன், அய்யப்ப மாதவன் ஆகியோர் அப்பாஸின் படைப்புகள் மீது கட்டுரை வாசித்தவர்கள். அப்பாஸின் தனித்துவமான நெடுங்கவிதைகளை லீனா மணிமேகலை தன் குரலின் ஊடாய் நிகழ்த்திக் காட்டினார்.

இரண்டாம் அமர்வை அ. வெண்ணிலா ¦¿றியாளுகை செய்தார். கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, சி. மணியோடு தனக்கிருந்த நட்பையும், சி. மணியின் இலக்கிய ஈடுபாடுகள் குறித்தும் விரிவாகப் பேசினார். பதினைந்து ஆண்டுகளாக சி. மணியோடு நட்போடும், இறுதி நாட்களில் அவருக்குத் திணையாகவும் இருந்த சாகிப்கிரான், கரிகாலன், அசதா, வியாகுலன் ஆகியோர் சி. மணியின் படைப்புலகம் குறித்த ஆய்வுகளை முன்வைத்தார்கள். சி. மணியின் கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்தவற்றை இசை வாசித்துக் காட்டினார்.

ரவி சுப்பிரமணியம் இருவரது கவிதைகளிலிருந்தும் சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மெட்டமைத்துப் பாடலாக்கி தன் குரல் வழியே உருகியோடச் செய்தார். இளங்கோ கிருஷ்ணனும் நானும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார்கள். சென்னையிலிருந்தும் பிற மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த 50க்கும் மேற்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களுக்கும் இன்பா சுப்பிரமணியம் நன்றி பகர்ந்தா

Saturday, December 10, 2011

கோணங்கி - வரைபடத்தில் ஊரும் எறும்பு


   நான்காம் வகுப்பு வாசித்த காலத்தில் எங்கள் பள்ளிக்கு ஒருவர் வந்தார். அவரது சட்டையில் சில குழந்தைகளின் முகங்கள். ‘இந்தப் பிள்ளைகளைப் பாருங்கள். அவர்கள் கடலுக்குள் போய்விட்டார்கள். இனி வர மாட்டார்கள்என்று கலங்கிய கண்களுடன் சொன்னார். தனுஷ்கோடியை நோக்கி வந்த ரயிலை, அப்போது அடித்த புயல் உள்ளே இழுத்துச் சென்றதில் நூற்றுக்கணக்கானவர்கள் அப்படியே சமாதியானார்கள். அதில் உள்ள முகங்களைத்தான் காட்டினார். அவருக்கு தனுஷ்கோடி வாத்தியார் என்று பெயர் வைத்தோம். ஐந்து பைசா, பத்து பைசா என கை நிறைய வசூலித்து, அவருக்கு கொடுத்தோம். கடலுக்குள் போன ரயில் என்ன ஆனது என்று யோசித்தேன். ‘தமிழ்நாடுபத்திரிகையில் தனுஷ்கோடி பாலத்தின் படத்தைப் போட்டிருந்தார்கள். இரண்டு கைகளையும் விரித்து நிற்கும் பூதம் போல அது இருந்தது. அந்தப் பூதம் தான் குழந்தைகளைக் கொண்டுபோனதாக நினைத்தேன். அந்த இடம், நிலம், கடல்இப்போது எப்படி இருக்கும்? என்னுடைய கற்பனைப் பயணத்தின் ஆரம்பம் அதுதான்.

கிராமத்துத் தெருக்களைக் கடந்து இருந்தது பள்ளி. வீட்டில் இருந்து பள்ளி வரை செல்லும் சிமெண்ட் வாய்க்காலை சிலேட் குச்சியைக் கொண்டு கோடு இழுத்தபடி போவதும் வருவதுமாக இருந்தேன். ரோட்டை எனக்கான ஓடு பாதையாக நினைத்து ஓடிக்கொண்டே இருந்தேன். காது வடிந்த கலிங்க மேட்டுப்பட்டி பெண்கள் வயல்காட்டில் குலவை போடுவது, நென்மேனி மேட்டுப்பட்டி வயல்வெளி, கலிங்க மேட்டுப்பட்டி கம்மாய், 20 யானைகள் வரிசையாக நின்ற தோற்றத்தில் படுத்துக்கிடக்கும் குருமலை எனச் சுற்றி அலைந்ததில், எல்லாக் கிராமங்களிலும் மறைந்து திரியும் சூனியக்காரிகள் என்னை ஆட்கொண்டார்கள்.

பூட்டிக்கிடக்கும் வீடுகளின் வாசலைப் பார்த்து நிற்பேன். பழைய வீடுகள் சொன்ன சேதியில் இருந்துதான் என் கதையின் முதல் வரி துவங்குகிறது. எந்த ஊருக்குப் போனாலும் நான் தேடிப் பார்ப்பது அந்தக் கிராமத்துக்கு ஒரு காலத்தில் தாகம் தணித்த கிணறுகளை. பெண்கள் தங்களது அந்தரங்கத்தை பரிமாறிக்கொள்ளும் இடம் அதுதான். கிணற்றடிப் பெண்களின் தோற்றத்தில்தான் எல்லாக் கிராமங்களும் மறைந்திருக்கின்றன. நாகலாபுரத்தில் பார்த்த பம்பை, ஆதக்காள், வேடப்பட்டி பாட்டி எனது கதைகளில் உலவுகிறார்கள். பயணப் பாதையில் தரிசித்த முகங்கள் கதைக்குள் புதைகின்றன. ஊர் ஊராக அலைந்து நான் பார்க்கும் ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு காகிதச் சுருள் எழுதப்பட்டு இருக்கிறது.
வண்ணத்துப்பூச்சிகளைப் பிசாசுகள் என்று நினைத்து விரட்டிய ஆதிவாசிகள் முதல், மிருகங்களின் எலும்புகளை உப்பில் பதனிட்டு உலர்த்தியவாறு ஜிப்சிகளாகத் திரியும் குறத்திகள் வரை மனிதர்களைப் பார்க்கவே அலைகிறேன். பறவை, மனிதனின் கதையைச் சொல்லியவாறு நகரங்களின் மேல் பறந்து பார்க்கிறேன். வெளிப்படையாகத் தெரியும் கட்டடங்களைவிட, அதை எழுப்புவதற்கு முன்னால் இடிக்கப்பட்ட பாழடைந்த பங்களாக்கள் மட்டுமே எனக்குத் தெரிகின்றன. பட்டினியும் வறுமையும் பின்துரத்த புதுமைப்பித்தன் அலைந்த சென்னைத்தெருக்கள், ஜி.நாகராஜன் கலைத்தெறிந்த மதுரைத் தெருக்கள், கிருஷ்ணலீலா, பவளக்கொடி, நல்லதங்காள், கோவலன் கதைகளை நாடகமாடி முடித்த தென்னகத்தின் அத்தனை கலைத்தெருக்களையும் கால்களால் அளந்தும் களைப்பு வரவில்லை. ஓடிய கால்களுடன் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
மத்தியப்பிரதேசம் மண்மாடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி நடந்தால் மாங்கி, தூங்கி என்ற இரண்டு மண் மலைகள் இருக்கின்றன. நிர்மல் சாகர் முனிமகாராஜ் என்ற தமிழ்ச்சமணன் சமாதி அங்கே இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டுக்கு வந்து போனவன் அவன். காட்டுப்பூக்களைப் பறித்து அவனது சமாதிக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறேன். கல்லும் மணலுமான விநோதப் பரப்பில் நடக்கும்போது வனதேவதைகள் நமக்குப் பாதுகாப்பாக வரும். சூரியனின் நிழல் படாத உஜ்ஜயினியில்தான் விக்கிரமாதித்தனின் 32 சிம்மாசனங்கள் இருக்கின்றன. புதிர்க் கதைகளுக்கான 24 கம்பளங்கள் இருக்கின்றன. அங்கு உட்கார்ந்து எனக்கும் கதைகளைத் தருமாறு கேட்கிறேன். காலன், எமன், தூதன் மூவருக்குமான கோயில் அங்குதான் இருக்கிறது. அந்தச் சிறு கோயில் ஏதோ ஒன்றை எனக்கு ரகசியமாகத் தருகிறது.

ஆந்திராவின் அமராவதிச் சிற்பங்கள் நம்முடைய கலையை அப்படியே சொல்கிறது. ஆனால், அங்கு முழுமையாக இல்லை. பாதி சென்னை மியூஸியத்தில்தான் இருக்கிறது என்றார்கள். இங்கு வந்து பார்த்தேன். இதிலும் முழுமையாக இல்லை. லண்டன் மியூஸியத்தில் இருப்பதைத் தெரிந்து அங்கும் போய்ப் பார்த்தேன். ஆக, அமராவதிச் சிற்பங்கள் முழுமையாகப் பார்த்துவிட்டேன்.

அதே ஆந்திரத்தில் நாகார்ஜூனகொண்டா சிற்பக்கூடம் என்னையே செதுக்கியது. ஆந்திரா, பௌத்தத்துக்கு முக்கியமான இடம். சமணம் செழித்த கர்நாடகா காட்கலா நான் பல முறை பார்த்தது. இந்த நூற்றாண்டின் முதல் நாளான 1.1.2000 அன்று அஜந்தாவில் இருந்தேன். ஒரு முறை பார்த்தால் உணர முடியுமா அஜந்தாவை? ஜப்பான் ஓவியன் ஒருவனை பார்த்தேன். அஜந்தாவை 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து பார்த்துச் செல்வதாகச் சொன்னான்.

நாளந்தாவுக்கும் கயாவுக்கும் மத்தியில் ராஜகிரகம் என்ற நகரம் இருக்கிறது. பதவி, ஆசை, அதிகாரம் அத்தனையும்விட்டு வெளியேறிய புத்தன் அங்குதான் தங்கினான். அவனது காலடி பட்ட இடத்தில் வெந்நீர் ஊற்றுகள் உருவானதாக ஐதீகம். அடுத்தது என்ன என்று அங்கே இருந்துதான் புத்தன் யோசித்தான். ஓர் இரவு அங்கு தங்கியிருந்தபோது, ஒளியற்ற இரவாக அந்த நிலவாக தெரிந்தது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி நகரத்தைத்தான் என்னுடையபாழிநாவலில் கொண்டு வந்தேன். அது அசோகரின் மனைவி ஊர். அங்கு இருக்கும் ஆபு மலையைவிட்டு விலக அதிக நாட்கள் ஆகும். இப்படி என்னுடைய பயணம், மறைக்கப்பட்ட இடங்களைத் தோண்டிப் பார்ப்பதாக அமையும்.
போதி தர்மா, மார்க்கோபோலோ, யுவான்சுவாங் ஆகிய மூன்று பயணிகள் எனக்கு மலைப்பை ஏற்படுத்தியவர்கள். எந்த வசதியுமற்ற காலத்தில், தமது மன தைரியம் மட்டுமே அவர்களது மூலதனம். வானம், பூமி இரண்டு மட்டும்தான் பக்கத்துணை. அதில் போதி தர்மாவின் தைரியம் அசாத்தியமானது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வேடன் அவன். பௌத்தத் தத்துவத்தில் தேர்ந்த ஞானியாக மாறி, நாகப்பட்டினம், தனுஷ்கோடி வழியாக இலங்கை போய், அங்கே இருந்து சீனாவுக்குப் போனவன். தமிழகக் குஸ்தியையும் கேரளக் களரிப் பயிற்றையும் அங்கு அறிமுகப்படுத்தியவன்.
தெரிந்த இடங்கள், பார்த்துப் பார்த்துச் சலித்த இடங்கள் என்று இல்லாமல் தொல்லியல் துறையாலேயே தொலைக்கப்பட்ட பகுதிகளைத் தேடி வருகிறேன். எதையும் திட்டமிட்டுச் செய்வது கிடையாது. பிடித்த இடத்தில் விரும்பிய வரை இருக்க வேண்டும். ஆர்வமற்ற இடத்தை நொடியில் கடக்க வேண்டும். மதுரை போய்த் திரும்பலாம் என்று கோயில்பட்டியில் இருந்து பஸ் ஏறினால், மனம் என்னை மறுநாள் காலையில் காரைக்காலுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. அந்தக் கடல் மாமல்லபுரத்தை நோக்கித் தள்ளுகிறது. சிற்பங்கள், தஞ்சாவூருக்கு அழைக்கின்றன. பெரிய கோயில், என்னை மீனாட்சியை நினைக்கத் தோன்றுகிறது. மீண்டும் மதுரைக்கு வருகிறேன். இடைப்பட்ட ஊர்களில் இருக்கும் இலக்கியத் தலைகள் எல்லாரையும் ஒரு தட்டு செல்லக் குட்டு வைத்துவிட்டுத்தான் அவர்களிடம் இருந்து விடுபடுகிறேன்.

இன்னமும் அலுப்புத் தட்டாமல் என்னை அரவணைத்துக்கொள்கிறது தனுஷ்கோடி. கடந்த 20 ஆண்டுகளில் 200 தடவைகள் தனுஷ்கோடி போயிருக்கிறேன். கறுப்பு ரயில், தனுஷ்கோடி, அல்பரூனி பார்த்த சேவல் பெண், திறந்த விழிகளுடன் தூங்கும் ஸ்த்ரீகள், ராமனின் கற்பனையான தற்கொலைப் பாலம் எனப் பல கதைகளுக்கு அதுதான் கரு. ‘பாழிநாவலும் அதுதான். தனுஷ்கோடி புயலில் அடித்துச் செல்லப்பட்ட ரயிலில் சமாதியான பிணங்கள், எலும்புகள், அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் என எல்லாவற்றின் எச்சங்களும் இன்னமும் இருக்கின்றன. செத்துப்போன பெண்களின் நகைகளைத் திருடி வாழ்ந்த ஒருவன் இன்று அங்கு பைத்தியமாக அலைகிறான். கடைசியாக பச்சைக் கொடி அசைத்து அந்த ரயிலை அனுப்பிய ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்த்தேன். அந்த மணல் பரப்பில் கால்களைப் பதித்து நடக்கும்போது நானும் சில நாய்களும் மட்டும்தான் சுற்று எல்லையில் இருப்போம். என்னுடைய வேகத்துக்கு நடக்க முடியாமல் மூச்சை இழுத்து நின்றுவிடும் நாய்கள். தனியாகப் போவேன். ரப்பர், தோலில் செய்யும் செருப்புகள் தேயும் என்பதால், டயர் செருப்புகளைப் பயன்படுத்துவேன். புனை கதை நூலகமாக, மணல் நூலகமாக எனக்கு அது தெரிகிறது. அந்த ரயிலில் நானும் போய்க்கொண்டு இருப்பதாகவே உணர்கிறேன்.

எழுதுபவனுக்கு எழுத்தின் மூலமாகத்தான் ஜீவனே நகரும். எனக்கு அந்த ஜீவனைச் சூடாக வைத்திருப்பதே பயணங்கள்தான். அது என்னை வேறொன்றாக மாற்றுகிறது. புவிப்பரப்பை முழுமையாகப் பார்க்க எல்லா இடங்களையும் அகலமாகப் பாருங்கள். பார்க்காத இடம் பார்த்தல் சுகம். புது இடம் பார்த்தால் அதீதக் கற்பனை பிறக்கும். கற்பனையில் மிதக்காத மனிதனைச் சொல்லுங்கள். அவனையும் அலைந்து பிடிப்பேன்!’’

நன்றி: 16.9.09, ஆனந்தவிகடன், கட்டுரை. .திருமாவேலன், படங்கள்: வைட் ஆங்கிள் ரவிச்சந்திரன் /மதுரை வாசகன் 

Monday, December 5, 2011

எஸ்.ரா-வின் அன்னா ஏன் தற்கொலை செய்தாள்? கட்டுரையை முன் வைத்து ....





தொடர்புடைய சுட்டி ...http://www.sramakrishnan.com/?p=2692


bogan R - அற்புதம்.இந்த நாவல் எழுப்பும் கேள்விகளுடன் (மேடம் போவரியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்) பல நாள் முட்டிக் கொண்டிருந்தேன்.எதனால் நம்மால் 'அவர்கள் அதன்பிறகு எப்போதும் அடல்டரியில் ஆனந்தமாய் வாழ்ந்தார்கள்'என்று சொல்லவோ எழுதவோ முடியவில்லை?ஏன் எல்லா இடத்திலும் இதனால் அதிகம் பாதிக்கப் படுகிறவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள்?அல்லது அவ்விதம் காண்பிக்கப் படுகிறார்கள்?கடைச்யில் எப்படி அவர்களை அவர்களது 'குற்றம் 'தேடிப் பிடித்துக் கொன்றுவிடுகிறது?இந்த வகையில் உலக சரித்திரத்திலேயே எனக்குத் தெரிந்து அடல்டரியில் ஆனந்தமாய் வாழ்ந்த ஒரே புரட்சியாளன் பகவான் கிருஷ்ணன்தான் ))12/1
rajasundararajan - - எழுத்தாளர் என்ன கருத்தைக் கடத்துவத்ற்காக எழுதுகிறாரோ, அன்ன கருத்து அப்படியே வாசகரைச் சென்று சேர்ந்துவிடும் என்று உறுதி சொல்ல முடியாது. (இது குறித்து, bogan R - Buzz - "எப்போதும் போல இந்தக் கவிதையின் மறுநுனி உங்கள் கையில் இருக்கிறது..." என்னும் கவிதை கூடப் பேசுகிறது.)

ஆகவே, எஸ்.ரா. அவர்கள் 'அன்னா கரேனினா' பற்றிப் பேசியதாக இங்கு பதியப் பெற்றிருக்கும் கருத்தும் ஏற்கப்பட வேண்டியதே - அது தோல்ஸ்த்தோய் கடத்த மெனக்கெட்ட கருத்தாக இல்லாமல் எஸ்.ரா.வின் வாசிப்பின் வழி வந்ததாக இருக்க நேர்ந்தாலும்.

சரி, இது வழி, எஸ்.ரா. தமிழ்ச் சமூகத்துக்கு என்ன சொல்ல விழைகிறார்?

//நிராசை அல்லது குற்றவுணர்வு அல்ல, வாழ்வின் பொருளின்மை குறித்த எண்ணம் தான் அன்னாவை தற்கொலைக்கு நகர்த்துகிறது.//

//அவள் மிக அதிகமாய் வெறுக்கும் விரான்ஸ்கியை தான் மிக அதிகமாக நேசிக்கவும் செய்கிறாள். அவள் பிரச்சினை அதுதான். அதன் ஒரே தீர்வு மரணம் என்று முடிவு செய்கிறாள்.//

இதன் வழி, 'வெறுப்பதும் நேசிப்பதும் = வாழ்வின் பொருளின்மை' என்றாகிறது.

ஆக, "ஒன்று வெறு அல்லது நேசி; இரண்டையும் ஒட்டுக்காச் செய்து வாழ்வின் பொருளின்மைக்குப் போய்விடாதே - தற்கொலைக்கு இட்டுச் செல்லும்" என்கிறார் எஸ்.ரா.

[//சாகும்முன் அவள் தூங்கும் விரோன்ஸ்கியைப் பார்த்து அவன் மீது அளப்பரிய அன்பை உணர்கிற காட்சியை//

இப்படி ஒரு காட்சி நாவலில் உண்டோ? (இதெல்லாம் மாமல்லனுக்கே வெளிச்சம்!)]

அன்னா வ்ரோன்ஸ்கியை வெறுப்பதில்லை; தன்னலம் மிக்கதோர் ஊடலை நிகழ்த்துகிறாள் என்பதே என் வாசிப்பு (இந்த நாவலில் யாரும் யாரையும் வெறுப்பதில்லை என்பதும்). அது கிடக்கட்டும்.

July 12th (1852)

The desire of the flesh is personal good. The desire of the soul is the good of others. One cannot decline to admit the immortality of the soul, but one can decline to admit the soul's annihilation. Even if the body be distinct from the soul, and undergoes annihilation, what is there to prove annihilation also of the soul? Suicide is the most impressive expression and evidence of the soul; and the existence of the soul is a proof of its own immortality. I have seen that the body dies: hence I presume that my own will die. But there is nothing to show me that the soul dies: wherefore I say that it is immortal, according to my own ideas. The idea of eternity is a disease of the intellect. Going to bed after lo.

Diary of Tolstoy, P 185
12/1 (edited 12/1)
rajasundararajan - - //சரித்திரத்திலேயே எனக்குத் தெரிந்து அடல்டரியில் ஆனந்தமாய் வாழ்ந்த ஒரே புரட்சியாளன் பகவான் கிருஷ்ணன்தான் ))//

வாழும் புரட்சியாளர்கள் உண்டே: சினிமாக்காரர்கள் சிலர், செவ்வாய் உச்ச அரசியல் முதுகுரவர் ஒருவர்!
12/1
nesamitran online - நன்றிகள் போகன், நன்றிண்ணே

விவாதங்கள் சுவாரசியமாய் இருக்கின்றன. மேலும் வளர்ந்தால் வாசக சாலையில் பகிரலாம்
Edit12/1
bogan R - முதிர் குரவர் அடல்டரியில் வாழுகிறார் சரி.ஆனந்தமாக இருக்கிறாரா என்ன?))12/1
rajasundararajan - - வாழ்வா சாவாதான் பேச்சு. கிருஷ்ணனைப் பற்றிய மகாபாரதக் கதையில் இதெல்லாம் கிடையாது. அப்புறமா வந்த புராணங்கள்லதான் - அதுவும் பொண்ணுங்கதான் லவ்வுதுங்க; ஒன்னும் நடந்தாமாதிரித் தெரியலை. ஆனா கிரேக்கக் கடவுள்களெப் பாருங்க, சும்மா புகுந்து விளையாடியிருக்காங்க.

பொண்டாட்டிகள்லாம் எப்படி அடல்ட்ரில வருவாங்க? அவரெ விடுங்க. இங்லீஸ் தலைப்பு வெச்சு நாவல் எழுதுற தமிழ் எழுத்தாளர் ஓ.கே.யா?

சரி, பிரச்சனைக்கு வருவோம். அடல்ட்ரியினால் வரும் இக்கட்டுகள், உணர்வு காரணமாகவும் உலகு காரணமாகவும் வரலாம். உலகு காரணமாக வந்தாலும் அதையும் நாம் உணர்வுக்கு மொழிபெயர்த்தே மதிப்பிடுகிறோம். வ்ரோன்ஸ்கி தனக்கென்று ஒரு லட்சியத்தைத் தேடிக் கொள்வது, சுயமுக்கியத்துவம் பார்க்கும் அன்னாவுக்கு, தான் கழித்துக்கட்டப் படுவதாகப் படுகிறது. இவ்வளவுதான் விசயம்.

//விரோன்ஸ்கி ஒழுக்கத்தை மீறினாலும் அதனை நேர்மையாக எதிர்ப்பவன் அல்ல, அவன் ஒழுக்கத்துடன் வாழ்வின் இருண்மையுடன் ஒரு விட்டில் போல் விளையாட மட்டுமே விரும்புபவன். அதனாலே தல்ஸ்தோய் அவனைக் குற்றவுணர்வில் வாடுபவனாகக் காட்டுகிறார்.//

('இருண்மையுடன் ஒரு விட்டில்பூச்சி' என்னும் உருவகமெல்லாம் கட்டுரையாளருக்கு உரியது. எஸ்.ரா.வுக்கு சம்பந்தமில்லை.)

வ்ரோன்ஸ்கி, மன்னரின் பாதுகாப்புப் படையில் செல்வாக்கு உள்ளவன். அதனால் இயல்பாகவே சமுகப் பார்வைக்கு மதிப்புக் கொடுப்பவன். அன்னாவோடு அவனுக்குக் கள்ள உறவொன்றும் கிடையாது. அவன் அவள் வீட்டுக்குள் புகுந்து உறவாடவில்லை. அவளைத் தன் வீட்டுக்குக் கொண்டுசென்று வாழ்க்கை நடத்துகிறான்; வெளிநாட்டுக்கு - வெனீசுக்கு - உல்லாசப் பயணம் கூட்டிக்கொண்டு போகிறான். அவளை விட்டு வேறெவளிடமும் தாவாமல் கடைசிவரை அவள்பால் காதலாக இருக்கிறான். கட்டுரையாளர் 'வ்ரோன்ஸ்கி' குணவார்ப்பைக் கொச்சைப் படுத்துகிறார்.

அன்னாவுடைய வாழ்க்கைப் பயணத்தையும் லெவினுடைய வாழ்க்கைப் பயணத்தையும் குறுக்கு முரண் (cross) ஆக்கிப் பார்க்க வேண்டும். அன்னா தற்கொலை செய்துகொண்ட பிறகும் ஒரு கூடுதல் புத்தகமாக லெவினுடைய கதை ஏன் வளர்க்கப்பட்டிருக்கிறது என்று யோசிக்க வேண்டும்.

எஸ்.ரா. நன்றாகத்தான் பேசியிருப்பார். ஆனால் அவர் தன் ஞாபகங்களில் இருந்து பேசுவதால் இன்னின்ன தகவல்களில் வழுவினார் என்று நமக்குத்தான் பிரித்தறியத் தெரிந்திருக்காது. அவ்வளவு பெரிய நாவலை வாசித்து நம்மை அணியப்படுத்த நமக்க்கெல்லாம் பொறுமை இருக்கிறதா என்ன?
12/1 (edited 12/1)
Joe Anand - //சரித்திரத்திலேயே எனக்குத் தெரிந்து அடல்டரியில் ஆனந்தமாய் வாழ்ந்த ஒரே புரட்சியாளன் பகவான் கிருஷ்ணன்தான் ))//

போகன் கருத்து குறித்து மதுபான விருந்தொன்றில் பேசினேன், மதவெறியற்ற நண்பர்கள் என்பதால் என் தலை தப்பியது ;-)
12/1 (edited 12/1)
bogan R - என்னைப் பொறுத்தவரை அடல்டரி என்பது இன்னொருத்தர் மனைவியோட அல்லது புருசனோட நைசா பேசி சல்சா பண்றது..(சல்சா பண்ண தெம்பில்லாமல் நைசா பேசிக் கொண்டே மட்டுமே இருக்கிற ரொம்ப சாதா அடல்டரியில் இருந்து புருஷன் அல்லது மனைவி முன்னாலையே இன்னொருவருடன் இழைகிற ஆசிட் அடல்டரி வரை நிறைய கிரேடுகள் உண்டு.மனதிலோ உடலிலோ அடல்டரி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.வெகு சிலரே அதை எல்லை வரைத் துரத்திக் கொண்டு போகிறார்கள்.

கிருஷ்ணன் தனது அடல்டரியை consummate பண்ணவில்லை என்கிறீர்களா...பாலகுமாரனும் ஏறக்குறைய அப்படித்தான் சொல்கிறார்.ஆனால் அடல்டரி விசயத்தில் பாலகுமாரனை விட பாகவதம் சொல்வதையே நம்புகிறேன் .பாலகுமாரனின் பின்கதைச் சுருக்கம் அவ்வளவு சரியில்லை என்பதும் ஒரு காரணம் .மீராவும் ராதாவும் ஒன்றில்லை.ராதா கிருஷ்ணா உறவு full scale adultery தான்.என்ன அது divine adultery.

புராணங்களைப் போலவே பழைய ஏற்பாட்டை நுணுகிப் படிக்கும் இன்றைய ஒழுக்க வாதிகளும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள்.சோதோம் நகருக்கு ஆபிரகாமைப் பார்க்க்க வருகிற தேவர்களை ஓரினச் சேர்க்கைக்குத் தரும்படி அங்குள்ளவர்கள் சூழ்ந்துகொண்டு கேட்க ஆபிரகாம் திட்டவட்டமாக மறுத்துவிடுகிறார்.அடுத்து அவர் போடுவதுதான் அணுகுண்டு.வேண்டுமெனில் கன்னி கழியாத எனது இரண்டு மகள்களைத் தருகிறேன் .அவர்களை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்கிறார்!அதே போல் தகப்பனை 'மயக்கி 'அவன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்கள் பற்றி விவிலியம் சொல்கிறது..

ஆகா மதங்களில் எவ்வளவு அசிங்கம் பார்த்தீர்களா என்ற மன நிலையில் இதைச் சொல்லவில்லை .நம் ஒழுக்கங்கள் எவ்விதம் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன என்பதற்காய் சுட்டிக் காட்டினேன்.கிருஷ்ணனுக்கு மனத் தடைகளே இல்லை.அவனுக்கு முடிவுகளே முக்கியம்.வழிமுறைகள் அல்ல.அவை காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும் என அவன் அறிந்திருந்தான்.ராமனுக்கு மனைவியைக் காதலிப்பதில் கூட மனத் தடைகள் இருந்தன.ராவணனில் இருந்து வண்ணான் வரை குறுக்கே வந்து கொண்டே இருக்கிறார்கள்..அவனுக்கு தர்மம் என்று சொல்லப் பட்ட சரியான வழிகளில் சரியான வேகத்தில் போய் சரியான நேரத்தில்தான் சரியான எதையும் அடைந்து தீரவேண்டும்.Poor boy!

அவன் மனைவி மேல் ராவணனுக்கு ஆசை கொள்ளத் துணிச்சல் வந்ததில் ஆச்சர்யமென்ன?எப்படியும் அவன் 'தர்மத்தின் வழி 'வானரப் படையெல்லாம் திரட்டி வருவதற்குள் விடிந்துவிடும்.அதற்குள் she is worth a try என்று அவன் நினைத்திருக்கலாம்.அம்மணி படு காத்திரமாய் அறத்தின் மீது சப்பணமிட்டு அமர்ந்திருந்ததால் ராமன் தப்பித்தான்.அகலிகை போல் கணத்தளர்ச்சி கூட அவளுக்கு நேரவில்லை.அதுதான் மேட்டர்.So who is the hero?

கிருஷ்ணனிடம் இதையெல்லாம் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது.மாறாக மண்டோதரியை எங்கே கிருஷ்ணன் தூக்கிப் போய்விடுவானோ என்ற கவலையிலேயே ராவணின் பத்து தலைகளும் உதிர்ந்திருக்கும்!
12/2 (edited 12/2)
bogan R - இன்னும் நிறைய பேசலாம் .அலைபேசியில் எனது ஆபிஸ் தோழி அழைக்கிறாள்.நானும் கொஞ்சம் அடல்டரி செய்ய வேண்டி இருக்கிறது.ஆகவே பிறகு வருகிறேன்.காலை எழுந்த உடன் காபி.பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல அடல்டரி என்ற பாடலுடன் ......12/2
Joe Anand - I was reminded about the movie "Year One" after Bogan mentioning the sin city Sodom & Abraham. It's a fab parody of a lot of stories from the old testament.12/2
rajasundararajan - - இயேசு கிருஸ்த்துவின் வம்சாவழியிலேயே பர-ஒழுக்கம் உண்டென்று காட்டப் படுகின்றது: and Judah the father of Perez and Zerah by Tamar, and Perez the father of Hezron, and Hezron the father of Ram, 4 and Ram the father of Amminadab, and Amminadab the father of Nahshon, and Nahshon the father of Salmon, 5 and Salmon the father of Boaz by Rahab, and Boaz the father of Obed by Ruth, and Obed the father of Jesse, 6 and Jesse the father of David the king. And David was the father of Solomon by the wife of Uriah,

Tamar, Rahab, Uriah. இவர்களில் தாமார், கணவரின் தந்தையை(மாமனாரை)க் கூடுபவள். ராஹாப் ஒரு விலைமகள். அடைக்கலம் கொடுத்தமைக்காகப் பின்னாளில் வரிக்கப் படுபவள் (இது அடல்ட்ரி இல்லை எனலாம்). உரியாவின் கணவனைச் சதிசெய்து கொன்றுபோட்டு தாவீது அவளை மணந்துகொள்கிறான்.

இது ஏன் சொல்லப் படுகிறது என்றால், /முடிவுகளே முக்கியம். வழிமுறைகள் அல்ல/ என்பதனை வலியுறுத்தவே. /கிருஷ்ணனுக்கு மனத் தடைகளே இல்லை.அவனுக்கு முடிவுகளே முக்கியம். வழிமுறைகள் அல்ல. அவை காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும் என அவன் அறிந்திருந்தான்./ இதோடு நான் உடன்படுகிறேன். என்றால், ||கர்மணி ஏவ அதிகாரஸ் தே மா ஃபலேஷு கதாச்சன...|| என்பதினைக் கிருஷ்ணன் கூறி இருக்க முடியாது என்றும் விளங்குகிறது அல்லவா?

இராமனைப் பற்றிக் கூறுகையில், பண்படுத்தப்பட்ட இராமாயணக் கதையையே மேற்கோள் காட்டுகிறோம். மணிரத்னத்தின் "இராவணன்" படத்துக்கு ஆதாரமான ஒரு வரலாற்றுப் பார்வை இருக்கக் கூடும் என்று யோசித்து இருக்கிறோமா? அதாவது இராவணனை tempt செய்வதற்காகவே இராமன் சீதையை இராவண ஆட்சிப் பகுதிக்குள் (லங்க்கா, தென்னிலங்கை அல்ல; நர்மதோத்ரிப் பகுதி) கொண்டு நுழைகிறான். (இது முனிவர்கள் வகுத்துத் தந்த திட்டம் என்றும் சொல்லப் படுவதுண்டு). ஆனால், சீதையோ மண்ணின் மகள். நிலம்போல அசையாதவளும் கூட. "இராவணன் என்னை அவன் தாய்போலவே மதித்துக் காத்தான்" என்னும் எதிராளிப் புகழ்க் கூற்றுக்கு எரிச்சற்பட்டே அவளுக்குத் தீ வைக்க்கப் படுகிறது. சந்தேகப் பட்டு அல்ல.

இராமன் வாலியைக் கொன்றதும் சரியே - ரிக் வேத நியமத்தின் படி (தீர்க்கதமஸ் பிறந்த கதை). அதாவது, 'அண்ணனின் பெண்டாட்டியை அனுபவிக்கலாம்; தம்பியின் பெண்டாட்டி தகாது.' மாயமான் சம்பவத்தில், சீதை இலக்குவனை ஏசுவதும் இந்த மரபுரிமை காரணமாகத்தான்.

கண்ணன் Vs மண்டோதரி கற்பனைக்கு இடமில்லை. கண்ணன் கவர்ச்சி உள்ளவன்; எவரையும் கவர்ந்து சென்றதில்லை.

ஆனால் இக் கதையெல்லாம் நமக்கு என்னத்துக்கு? அன்னா கரேனினா தற்கொலைக்குப் பர-ஒழுக்கமா, அல்லது அதன் byproduct ஆகிற possessiveness-ஆ, எது காரணம்?

இதில், உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றான 'அன்னா கரேனினா'வையும் எழுத்தார்வம் கொண்ட தமிழர்கள் வாசித்திருக்க மாட்டார்கள் என்பதே வருத்தம் தருவது. இந் நிலையில், எஸ்.ரா. போன்றவர்களின் வாசிப்பறிவு நமக்குச் சர்க்கரை என்று கொள்வதே சரி.