Wednesday, November 16, 2011

ரெய்னர் மரியா ரில்கே- வின் கவிதையும் மூன்று கவிஞர்களின் மொழிபெயர்ப்பும்

கவிஞர் அனுஜன்யா


சாருவுக்குப் பிடித்த ரய்னர் மரியா ரில்கேவின் 'மீண்டும் மீண்டும்' கவிதையும் ..என் மொழிபெயர்ப்பு முயற்சியும். 

Again and again, however we know the landscape of love
and the little churchyard there, with its sorrowing names,
and the frighteningly silent abyss into which the others
fall: again and again the two of us walk out together
under the ancient trees, lie down again and again
among the flowers, face to face with the sky.

(Rainer Maria Rilke)



மீண்டும் மீண்டும் - 

காதல் தேசத்தையும்

தேவாலய வெளியின் 

சோகம் சுமந்த பெயர்களையும் 

பயங்கர மௌனப் பாதாளத்தில் 

மற்றவர் வீழ்வதையும் 

நாம் எவ்வளவு அறிந்தாலும், 

மீண்டும் மீண்டும் -

நாமிருவரும் சேர்ந்து நடப்போம் 

புராதன மரங்களுக்குக் கீழ் 

மலர்களுக்கிடையே 

வானத்தை நேர்கொண்டு 

படுத்தபடியே - மீண்டும் மீண்டும்




கவிஞர் ராஜசுந்தர ராஜன் 


மீண்டும் மீண்டும் 
காதல் நிலவெளியையும் அதில் ஆங்கே 
துயருறுத்தும் பெயர்களொடு இடுகாட்டையும்
பிறர் வீழ்ந்துபடும் 
அச்சம்தரும் ஊமை ஆழத்தையும் 
அறிவோம் ஆயினும், 
மீண்டும் மீண்டும் 
நாம் இருவரும் ஒருமித்திறங்கி 
முதுமரங்களின் தாழே நடக்கிறோம்;
மலர்களுக்கிடையே படுக்கிறோம் மீண்டும் மீண்டும்,
வானோடு முகாமுகமாக.


கவிதாயினி பத்மஜா நாராயணன் 


எவ்வளவுதான்,
ற்றவர்கள் வீழும் ,
துயர்தரும் பெயர்களை சுமக்கும் ,
அம் மயான பூமியுள்ள ,
அச்சுறுத்தும் ,அமைதிப் படுகுழியான
காதலின் நிலப் பரப்பை
நாமறிந்திருப்பினும்,
மீண்டும் மீண்டும்
அக் கிழ மரங்களின்
கீழ் நடந்து
மீண்டும் மீண்டும்
மலர்களிடை கிடந்தது
வானத்தோடு ஒர்முகமாகிறோம்




கூகுள் பஸ்ஸில் ஓர் உரையாடலின் போது நண்பர் கவிஞர் அனுஜன்யா துவக்கி வைத்த மொழிபெயர்ப்பு விளையாட்டை வெகு அழகாய் தொடர்ந்த கவிஞர் ராஜசுந்தரராஜன் அவர்களுக்கும் கவிதாயினி பத்மஜா நாராயணன் அவர்களுக்கு வாசகசாலை நன்றிகளை சமர்பிக்கிறது .